1 ஆம் சூர்யன் சாயும் நேரமே,
நோவுற்றோர் உம்மை சூழ்ந்தனர்,
உபாதை வேதனை கொண்டோராய்,
வந்தனர் மகிழ்ந்தே சென்றனர்.
2 இந்நாளும் மாலையானதே,
துன்பற்றோர் இன்றும் வந்திட்டால்,
உம்மை யாம் காண கூடுமோ?
நீர் சமீபம் என்றறிவோம்.
3 எம் வேதனை நீர் தீர்ப்பிரே,
துக்கத்தால் சோர்ந்து நோயினால்,
உம்மையே நேசிக்காதோறும்,
அன்பானோர் தம்மை இழந்தோறும்.
4 பூலோக பாரம் தாங்காமல்,
பாவத்தின் சோர்வும் நீங்காமல்,
துக்கத்தில் மூழ்கி மீளாமல்,
நீரின்றி யார்? மீட்ப்பார் எம்மை.
5 இப்பூவின் மாயை அறிந்தோர்,
ஆனாலும் மீளாதோருண்டு,
நண்பரால் வேதனை கொண்டோரும்,
உம் நட்பை அறிந்திடாதோரும்.
6 யாம் யாரும் நல்லோய்வு கொள்ளோமே,
பாவமற்றோர் எம்மில் இல்லை,
சாந்தமுள்ளோர் சேவை செய்வார்,
தன் தன் பாவம் நன்றறிவார்.
7 ஆம் நீரும் மானுடனல்லவே?
சோதனை வேதனை அறிவீரே,
உந்தன் காருண்யம் காணுமே,
மறைவாம் காயம் தெளிவாய்.
8 உம் கைகள் தொட்டிட வல்லமை,
உம் வார்த்தை ஒன்றும் வீணாகா,
இம் மாலை எம் ஜெபம் கேளுமே,
உம் கிருபையால், நீர் குணமாக்கும்.
Source: The Cyber Hymnal #15570